Header Ads



போலி பேஸ்புக் கணக்கை, இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் ஊடாக பிட்டிகல பொலிஸாரை அவமதித்த இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் போலி பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி, தேவையற்ற சொற் பிரயோகங்களால் பொலிஸாரை  அவமதிக்கும் வகையில் பதிவுகளை இட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வெ​ய்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த  20 வயதுடைய இளைஞன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் சென்ற குறித்த இளைஞரை ஏ​தோ ஒரு குற்றச் செயலுக்காகக் கைதுசெய்திருந்ததுடன்,  பிறகு அவரது அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலையான குறித்த இளைஞன் பேஸ்புக் ஊடாக பொலிஸாரை அவமதிக்கும் பதிவுகளை பதிவிட்டதால் பிட்டிகல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.