அல்பலாஹ் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி, கட்டிட நிர்மாணத்திற்கு உதவ முதலமைச்சர் உறுதி (படங்கள்)
நீர்கொழும்புப் - போரத்தொட்ட அல்பலாஹ் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் தினம் 05 / 02 / 2018 கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
அதிதியாக மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய அவர்களோடு மேல்மாகாணசபை உறுப்பினர் m s m. சகாவுல்லா உட்பட நீர்கொழும்பு வலயக் கல்வி காரியாலய அதிகாரி கே ஏ சி பெர்னான்டோ நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம் டி எம் நஸ்மிஹார், m n நஸ்மின் றோஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேல்மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லா சலீம் அவர்களது அழைப்பினை ஏற்று இரண்டாவது முறையாகவும் எமது அல்பலாஹ் கல்லூரிக்கு வருகை தந்த மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய அவர்களால் பாடசாலை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட சுற்று மதில் அங்குறார்ப்பன நிகழ்வும் நடைபெற்றது. அதேபோன்று இப்பாடசாலையில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடி கட்டிடத்தின் மேலதிக வேலைகளை பூர்த்தி செய்வதற்காக மேலும் ஒரு கோடி ரூபாய் நிதியுடன் விளையாட்டு மைதாணத்தின் தேவைகளுக்காக மேலதிகமாக 10 லட்சம் ரூபாவும் ஆக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா நிதியையும் கல்லுரிக்காகப் பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக நடாத்திட ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம் .
S D E C & O B A.
H A M. Faiseen.
மாஷா அல்லாஹ்! முன்னெப்பேதும் இல்லாதவாறு மிகவும் சிறப்பாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பேதங்கள் இன்றி அரசியல் சக்திகள் ஒன்றிணைந்தால் எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் வளம் பெறுவது திண்ணம்!
ReplyDelete