JVP பிக்கு 10 மில்லியன், செலுத்துமாறு விமலுக்கு உத்தரவு
மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி), 10 மில்லியன் ரூபாயைச் செலுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு, கொழும்பு வணிக நீதிமன்றம், இன்று (11) உத்தரவிட்டது.
விமல் வீரவன்சவினால் எழுதப்பட்டு, அண்மையில் வெளியிடப்பட்டிருந்த “நெத்த வெனுவட்ட அத்த” எனும் நூலினூடாக, ஜே.வி.பியின் அறிவுசார் சொத்து சூறையாடப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் டில்வின் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றிலேயே, மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.
அத்துடன், குறித்த நூலை விநியோகத்துக்கும், நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Post a Comment