Header Ads



"சம்பிக்க வழங்கிய காணியே எமக்கு வேண்டும் - இல்லையேல் பள்ளிவாசலை அகற்ற நாம் தயாரில்லை"

தம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­மா­ணிப்­பது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை தம்­புள்ளை ஓய்வு விடு­தியில் (ரெஸ்ட் ஹவுஸ்) இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் பிர­தி­நி­திகள், தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத ஆகியோர் கலந்து கொண்­டனர். வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்றது.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­னரும் மாத்­தளை, இரத்­தோட்டை, தொகு­தி­க­ளுக்­கான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் அமைப்­பா­ள­ரு­மான எஸ்.வை.எம். சலீம்தீன் கருத்து தெரி­விக்­கையில்;

‘தம்­புள்ளை மேயர் தம்­புள்­ளை­யி­லி­ருந்தும் 19 கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்ள நிக்­க­வட்­ட­வன பகு­தி­யிலே தம்­புள்ளை பள்­ளி­வா­சலை நிர்­ம­ணிக்க காணி­யொன்று தரு­வ­தாக கூறு­கிறார்.

பள்­ளி­வாசல் ஐவேளை தொழு­வ­தற்கு வச­தி­யாக தம்­புள்­ளை­யி­லேயே அமைய வேண்டும். அதனால் தம்­புள்­ளை­யி­லேயே காணி வழங்­கப்­பட வேண்டும். நிக்­க­வட்­ட­வன பகு­திக்கு பள்­ளி­வா­சலை அகற்­றிக்­கொள்ள நாம் தயா­ராக இல்லை.

முன்னாள் அமைச்சர் சம்­பிக்­க­ர­ண­வக்­க­வினால் ஏற்­க­னவே காணி­யொன்று ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அக்­காணி பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து 150 மீற்­றர்­க­ளுக்­கப்பால் புனித பிரதேச எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. அக்காணியே எமக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையேல் பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை.

இவ்விகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளோம் என்றார்.

No comments

Powered by Blogger.