Header Ads



புல்மோட்டையில் முஸ்லிம்களின் காணிகளில், கடற்படையினர் அத்துமீறல் - தௌபீக், அன்வர் தலையீடு

புல்மோட்டை ஜின்னாபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக மண்கிண்டி மலை பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிலிருந்து அதை அண்டிய பகுதியான ஜின்னாபுரம் பட்டிக்குடா கரையாவெளி முகத்துவாரம் போன்ற பகுதிகளில் காணிகளை பிரதேச மக்கள்  தமது வாழ்வாதனங்கள் மேற்கொள்ளும் நோக்கில்  குடியிருப்பு காணிகளை சுத்தம் செய்ய முற்படுகின்றபோது கடற்படையினர் முகாமிலிருந்து சென்று எச்சரிக்கை செய்வதுடன்  இடப்படுகின்ற வேலிகள்  கொட்டில்களை போன்ற பொருட்களை அகற்றி படை முகாமிற்குள் எடுத்து செல்வது போன்ற நடவடிக்கை தொடர்கின்றது 

இந்தவகையில் நேற்று 05 (சனிக்கிழமை) புல்மோட்டை ஜின்னாபுரம் கூமாங்குள பிளவு  பகுதியில் அப்துல் காதர் ஜெஸ்மீர் என்பவரால் அவருக்கு  சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் பரப்புள்ள குடியிருப்பு மற்றும் தோட்ட காணிக்குள் படையினர் 05 (சனிக்கிழமை) சென்று குறித்த நபரால் வேலியிடப்பட்டிருந்த சுமார் 40 க்கு மேற்பட்ட வேலிக்கான தூண்கள் கொட்டில் அமைக்கப்பட்டிருந்த கூரை தகடுகள் மற்றும் கம்பி போன்றவற்றை படையினர் அதிகாலை சென்று அனைத்தையும் அகற்றி படை முகாமிற்குள் எடுத்து சென்றவேளை 

குறித்த நபர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அவர்களிடத்தில் முறையிட்டதை தொடர்ந்து இது விடயமாக புல்மோட்டை பொலிஸ்  அதிகாரி மற்றும் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி,குச்சவெளி பிரதேச செயலாளர்,அரசாங்க அதிபர் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் நிலைமைகளை சுட்டிக்காட்டியதுடன் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளருக்கு உடன் விடயங்களை கவனத்தில் கொள்ளும்படி பணிப்புரை விடுத்தார் 

இது விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்கள் கிழக்கு மாகாண கடற்படை கட்டளை தளபதிக்கு தொலைபேசி மூலம் நிலைமைகளை தெளிவுபடுத்தினார் இதனை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் பேசியதை தொடர்ந்து புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இன்று காலை 6 (ஞாயிற்றுக்கிழமை) பொலிசார் குறித்த பகுதிக்கு சென்று விசாரணை நடாத்தியதுடன் கடற்படை முகாமிலிருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை மீள பெற்றுக்கொடுக்க  கடற்படையினர் உரியவரை பொருட்களை எடுத்து செல்லுமாறு வேண்டப்பட்டுள்ளார் 

அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி,புல்மோட்டை பொலிஸ் அதிகாரியிடம்  கடற்படையினர் எவ்வாறு பொதுமக்களின் காணிகளுக்குள் அத்துமீறி செயற்பட அதிகாரமில்லை என்றும் அன்வர் சுட்டிக்கட்டினார் 

பிரதேச செயலாளரால் ஏலவே மண்கிண்டி மலை படை முகாமிற்கு 50 ஏக்கர் பிரதேச செயலாகத்தால் அனுமதி நிலையில்  மேலதிகமாக சுமார் 97 ஏக்கர் பிரதேச மக்களின் காணிகள் படையினரால் அத்துமீறி வேலியிடப்பட்ட நிலையில் அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் பிரதேச செயலாளரால் அரசாங்க அதிபரூடாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் மேலதிகமாக மக்களின் காணிகள் பிடிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதியால் கடந்த டிசம்பர் 31 ம் திகதிக்கு முதல் படையினர் மேலதிக காணிகளை விடுவித்துக்கொண்டிருக்கும் நிலையில் குறித்த படையினரின் அத்துமீறல் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது ,பிரதேச செயலாளரிடம் மேலதிகமாக  93 ஏக்கர் காணிகளை புல்மோட்டை படை முகாமிற்கு தரும்படி கோரப்பட்ட நிலையில் பிரதேச செயலாளரால் பிரதேச மக்களில் அதிகமானோர் காலிகளற்ற நிலையில் இருக்கும்போது தர முடியாது நிலைமை உள்ளதாகவும் படையினருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 

குறித்த காணியை அண்டிய பகுதியில் வன பரிபாலன திணைக்களத்தின் ஜி.பி.எஸ் யினூடாக தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறிய நிலையிலும் இது விடயமாக பேசப்பட்டு வருகின்றது 

ஏலவே முன்னாள் முதல் அமைச்சர் நசீர் அஹம்மத் அவர்களின் காலத்தில் புல்மோட்டை பிரதேசத்தில் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் தலைமையில் வழங்கப்பட்ட 900 மேற்பட்ட  காணி அனுமதி பத்திரத்தில் குறித்த பட்டிக்குடா,ஜின்னா புறம் பகுதிகளுக்கும் காணி அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட நிலையில் முஸ்லிமக்ளுக்கு வெறுமனே காடுகளுக்கு மட்டுமே  காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக முன்னாள் பெரும்பான்மை மாகாண சபை உறுப்பினர் ஒருவரால் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யப்பட்டு விசேட குழு இங்கு வந்து ஆராய்ந்த நிலையில் பிரதேச செயலகத்தில் அனுமதி பத்திரத்தின் (லெட்ஜ்ர் )அடிக்கட்டைகளை ஜனாதிபதி காரியாலயத்திற்கு கொண்டு சென்ற நிலைமையில் திட்டமிட்டு குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்களை மீள் குடியேற்ற விடாமல் தடுப்பதே இதன் நோக்கம் தொடர்ந்தும் எமது பிரதேச மக்களை அச்சுறுத்தி எச்சரிக்கை செய்து வருகின்றனர்,எதுவாயினும் எமது பிரதேச காணிகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன 

இதுவிடயமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இன்னும் ஒரு சில தினங்களில் விசேட கூட்டமொன்றை பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் தனது அறிக்கையில் தெரிவித்தார் 

No comments

Powered by Blogger.