மாகாண தேர்தலை விகிதாசார முறையில் நடாத்த, கட்சித் தலைவர்கள் தீர்மானம்
மாகாண சபைத் தேர்தலை பழைய முறைப்படி நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நேற்று (04) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலை பழைய முறைப்படி நடாத்துவதாயின் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்ட திட்டங்களை மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (04) சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் தொடர்பில் பிரதமருக்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment