"சுதந்திர கட்சியின், மஹிந்த எதிர்ப்புக் குழு" பாராளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த எதிர்ப்புக் குழு தொடர்ந்தும் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்ற அமர்வில் நான் கலந்துகொள்ளப்போவதில்லை. காரணம் தற்போது எமது நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாடசாலை மாணவர்களைப் போன்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அத்தோடு பாராளுமன்ற சம்பிரதாயங்கள் தொடர்ந்தும் மீறப்பட்டு வருகின்றன. இது போன்ற முறையற்ற அமர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமின்மையின் காரணமகவே நாம் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வருகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment