Header Ads



மத்திய கிழக்குக்கு செல்லவிருப்பவர்களே, இது உங்களின் கவனத்திற்கு..!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் என்று விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து விநியோகிக்கப்படாதென குடிவரவு -குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு -குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், இந்த மாதம் 31ஆம் திகதியுடன் குறித்த கடவுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கை இரத்துச்செய்யப்படுமென, குடிவரவு -குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டு பணிப்பாளர் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே முதலாம் திகதியிலிருந்து அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.