Header Ads



சிகிச்சைமுடிந்து சம்பந்தன், வீட்டுக்கு வந்தார் - ஓய்வெடுக்குமாறு அறிவுரை

மூன்று நாட்களாக கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நேற்று வீடு திரும்பினார்.

உடல்நலக் குறைவினால், இரா.சம்பந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலன் தேறியதை அடுத்து, நேற்றுக்காலை அவர், வீடு திரும்ப மருத்துவர்கள் அனுமதித்தனர்.

எனினும், தமது கண்காணிப்பில் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு இரா.சம்பந்தனுக்கு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் அவர் மீண்டும் தமது பணிகளுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.