Header Ads



ரணில் தேசிய அரசாங்கம், அமைக்க இடமளிக்கமாட்டோம் - அனுரகுமார

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்கம் என்ற பிரேரணையை பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்தால், அதனைத் தோற்கடிக்க செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

19 ஆவது திருத்தச் சட்டத்துக்குள் ஓட்டை போடுவதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க பாராளுமன்றத்தில் இடமளிக்கப் போவதில்லை.

பெரும்பான்மைப் பலமுள்ள கட்சியுடன் ஒரு கட்சியிலிருந்து ஒருவர் சேர்ந்தாலும் தேசிய அரசாங்கம் அமைக்க முடியும். இதனால், 30 பேர் கொண்ட அமைச்சரவையை 45 ஆக அதிகரிக்க முடியும்.

இருப்பினும், இவை அனைத்தையும் பாராளுமன்றத்தின் அனுமதியுடனே முன்னெடுக்க வேண்டும். இதற்கு ஒரு பாராளுமன்றத்தில் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென்பதை மக்கள் விடுதலை முன்னணி உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.