Header Ads



மணமகனை விமர்சித்துவிட்டதாக, ஜனாதிபதி மீது ஐ.தே.க. குற்றச்சாட்டு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்க​ளிடம் ஆற்றிய உரைக்கு ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

இன்று -17- கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்​கொண்ட நாடாளுமன்ற உறுப்பின​ர்களான நளின் பண்டார, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் ஜனாதிபதிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த நளின் பண்டார,

கி​ராமங்களில் மங்கள நிகழ்வுகள் ஏற்பாடு பண்ணும் போது, இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசுவார்கள். தனக்கு தெரிந்தவரை மணமகனை சபைக்கு அழைத்து மணமகன் தரப்பில் பேசுபவர் மணமகனை விமர்சித்து பேசுவதைப் போன்றே நேற்று ஜனாதிபதியின் உரை அமைந்திருந்ததாக நளின் பண்டார தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. It is our fate for electing and accepting an Angoda case as our ruler of our motherland Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.