இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுப்பார் - சம்பந்தன்
தமிழ் தேசிய கூட்டமைப்புன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இன்னும் இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுப்பார் என கூறினார்.
what it may be? cant he tell it?
ReplyDelete