30 பேர் கொண்ட அமைச்சரவை, திங்கள் பதவிப்பிரமாணம் (சு.க.யில் 6 பேர்)
நாட்டில் ஏற்பட்டிருந்த சர்ச்சையை அடுத்து, புதிய அமைச்சரவை, நாளை மறுதினம் (17) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் 19ஆவது திருத்தத்துக்கு உட்பட்டதாகவும் இருக்குமெனவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.
இதற்கமைய, ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியைச் சேர்ந்த அறுவர் உள்ளடங்களாக 30 பேர் கொண்ட அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யுமெனத் தெரியவருகின்றது.
எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வத் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
Post a Comment