Header Ads



கண் பார்வையற்றவர்களும் அடையாளம் கண்டுகொள்ள, இலங்கையில் அறிமுகமாகும் புதிய நாணயம்



இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணயக் குற்றிகள் சில இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயக் குற்றிகளில் 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் பெறுமதியான புதிய ரக நாணயக் குற்றிகள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நாணயக் குற்றிகளை கண் பார்வையற்றவர்களுக்கும் அடையாளம் கண்டுகொள்ளக் கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும்.

இந்த புதிய நாணயங்கள் எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் புழக்கத்தில் விடப்படவுள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

1 comment:

  1. Very GOOD. But what this illegal MP doing here?

    ReplyDelete

Powered by Blogger.