Header Ads



ஒட்டுமொத்த மக்களும், எம்முடன் இருக்கின்றனர் - மகிந்த அறிவிப்பு

சபாநாயகர் கரு ஜயசூரிய எதேச்சதிகாரமாக செயற்படுகின்றார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று நேற்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் நாடாளுமன்றில் கூட்டமொன்றை நடத்தியதனால் ஆளும் கட்சியினரும் அவையை விட்டு வெளியேறி சென்றனர்.

சபாநாயகர் தனக்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து எமக்கு எவ்வித தெளிவும் கிடையாது.

சபாநாயகரின் செயற்பாடு ஒட்டுமொத்த நாடாளுமன்ற வரலாற்றுக்கும் களங்கம் கற்பிக்கம் வகையில் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த மக்களும் தற்பொழுது எம் பக்கம் இருக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் எதிர்பார்ப்புக்களை கனவாக்கியுள்ளது.

நல்லாட்சி தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றார்கள் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Why do not you bring NCM against Speaker.....

    ReplyDelete
  2. ஆம் ஒட்டு மொத்த மக்களும் உங்களுடன் எதிரியாக இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. அப்போ எதிர் கட்சியினரும் உங்கள் பக்கமா. ஒன்றும் புரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.