Header Ads



பாராளுமன்றத்தை ஜனாதிபதி, கலைத்தது சட்டவிரோதமானது - ஐ.தே.க.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ள செயற்பாடு சட்டவிரோதமானது, ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பை மீறியுள்ளார் என ஐ.தே.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான தேர்தல் ஆணைக்குழு இந்த சட்டவிரோத வர்த்தமானியை ஏற்றுக்கொள்ளாது என நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உத்தியோகப்பூர்வமாக கலைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.