சபாநாயகரிடம் மரிக்கார், செய்த முறைப்பாடு
நாட்டின் ஊடகங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான ஊடகங்கள் மஹிந்த தரப்பினை ஆளும் கட்சி என குறிப்பிட்டு செய்தி அறிக்கையிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சபாநாயகர் நாட்டில் அரசாங்கமொன்று இல்லை என அறிவித்துள்ள நிலையில் சபாநாயகரின் தீர்மானத்தை புறந்தள்ளி ஊடகங்கள் மஹிந்த தரப்பினை ஆளும் கட்சி என அறிவித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment