Header Ads



அரசாங்கம் என அழைத்துக்கொள்ளும் கும்பலை தோற்கடித்து, உலகிற்கு உண்மையை எடுத்து கூறியுள்ளோம்

இந்த வாக்கெடுப்பில் ஐ.தே.மு, த.மு.கூ, ஜே.வி.பி கட்சிகள் இணைந்து 122 பெரும்பான்மை வாக்குகளை அளித்து, தம்மை அரசாங்கம் என்று அழைத்துக்கொள்ளும் கும்பலை தோற்கடித்து நாட்டுக்கும், உலகிற்கும் உண்மையை எடுத்து கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை தெரிவு செய்யும் போது பொதுஜன ஐக்கிய முன்னணி 7 பேரை பரிந்துரை செய்திருந்தது.


இதனை ஏற்றுக்கொள்ளாத அக்கட்சியினர் வெளிநடப்பு செய்ததுடன், சபாநாயகர் இலத்திரனியல் முறை மூலம் வாக்கெடுப்பு நடத்தினார்.

இதில் குறித்த தெரிவுக்குழுவுக்கு ஆதரவாக 121 வாக்குகள் பெற்று நிறைவுற்றப்பட்டுள்ளது.

இதையடுத்தே மனோ கணேசன் தமது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.