Header Ads



மைத்திரி - சஜித் சந்திப்பு, தனக்குத் தெரியும் என்கிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்திய பேச்சுக்கள் குறித்து தனக்குத் தெரியும் என்று பதவி நீக்கப்பட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் செயலக கடித தலைப்புடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்குத் தெரியாமல், சஜித் பிரேமதாச, சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தச் செய்திகளில் எந்த அடிப்படையும் இல்லை. சிறிலங்கா அதிபருடனான சந்திப்புக்கு முன்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதுபற்றி சஜித் பிரேமதாச, தெரியப்படுத்தியிருந்தார். சந்திப்புக்குப் பின்னரும், அதுபற்றி தெளிவுபடுத்தியிருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.