நாளைய பாராளுமன்றத்திற்கு மைத்திரி - மஹிந்த அணியினர் செல்வர்
நாளைய தினம் (27) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பரென்று, ரோஹித்த அபேகுணவர்தன எம்.பி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தற்போது நாடாளுமன்றமாக, கைப்பற்றப்பட்ட வலயமாகக் காணப்படுகின்றது என்றும் சபாநாயகர், பாதுகாப்பு வலயமொன்றை அமைத்துள்ளார் என்றும் கூறினார்.
நாளைய தினம் (27), நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், மக்கள் கலரி மற்றும் சபாநாயகர் அனுமதியுடனான முக்கியஸ்தர் கலரி என்பவற்றை மூடிவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நாள்களில், நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, மக்கள் கலரி மற்றும் முக்கியஸ்தர்கள் கலரிகளைத் தற்காலிகமாக மூடி விடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment