Header Ads



டைவோர்ஸ் செய்யப்போகும் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ள போவதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உடனான அரசியலை கைவிட போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எந்த வகையிலும் இனி வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட போவதில்லை.

தனது அரசியல் பயணமும் நாட்டின் எதிர்காலமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனே இருக்கும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.