Header Ads



கிளர்ச்சி அல்லது தீவிரவாதத்தினை ஏற்படுத்தி, ஆட்சியினை கைப்பற்ற மஹிந்த அணி சூழ்ச்சி

நாட்டில் கிளர்ச்சியினை ஏற்படுத்தியோ, அல்லது தீவிரவாதத்தினை ஏற்படுத்தியோ  ஆட்சியினை கைப்பற்ற மஹிந்த அணியினர் சூழ்ச்சி செய்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று -10. இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ{மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை கட்டாயம் வீழ்த்த வேண்டும். ஆனால் வீழ்த்தும் முறைமை தெரியவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோதாபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்து மிகவும் பாரதூரமானது. எனவே அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.