Header Ads



இலங்கையிலிருந்து உம்றா, செல்வோருக்கு அடாவடி - சவூதி தூத­ரகம் அநீதி

இலங்­கை­யி­லி­ருந்து உம்ரா பயணம் மேற்­கொள்ளும் பய­ணிகள் ஸ்ரீலங்கன் விமா­ன­சேவை மற்றும் சவூதி விமா­ன­சேவை ஊடாக மாத்­தி­ரமே பய­ணிக்க முடியும் என இலங்­கை­யி­லுள்ள சவூதி தூத­ரகம் உம்ரா முக­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளதால், உம்ரா பய­ணிகள் பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக உம்ரா முக­வர்கள் தெரி­வித்­துள்­ளனர். இந்தத் தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்து குவைத், ஓமான் விமான சேவை மற்றும் பிளைய் டுபாய் விமா­ன­சேவை மூலமும் உம்ரா பய­ணத்தை மேற்­கொள்ள ஆவன செய்­யு­மாறும் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

சவூதி தூத­ரகம் இந்த நடை­மு­றை­யினை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

உம்ரா பய­ணிகள் ஸ்ரீலங்கன் அல்­லது சவூதி விமா­ன­சேவை பய­ணச்­சீட்­டினை குறிப்­பிட்ட விமா­ன­சேவை தலை­மை­ய­கத்தில் உறுதி செய்­து­கொள்­வ­துடன் தடுப்­பூசி ஏற்­றிக்­கொண்­ட­தற்­கான அத்­தாட்­சி­யையும் சவூதி தூத­ர­கத்தில் சமர்ப்­பித்தால் மாத்­தி­ரமே கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உம்ரா விசா­வினை சவூதி தூத­ரகம் கட­வுச்­சீட்டில் பதிவு செய்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

சவூதி தூத­ரகம் இவ்­வாறு இது விட­யத்தில் ஏக­போக தனி­யு­ரிமை பிர­யோ­கிக்க முடி­யா­தெ­னவும் திறந்த ஆகாயக் கொள்­கைக்­கி­ணங்க தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்­டு­மெ­னவும் உம்ரா முக­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்பில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பிரத்­தி­யேக செய­லாளர் எம்.எச்.எம்.பாஹி­மிடம் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு கருத்து தெரி­வித்தார்.

இது தொடர்பில் எந்­தவோர் முறைப்­பாடும் எழுத்து மூலம்  கிடைக்­க­வில்லை. அவ்­வாறு முறைப்­பா­டுகள் கிடைத்தால் சவூதி தூத­ர­கத்­துடன் இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டலாம் எனத் தெரி­வித்தார்.

இலங்கையிலிருந்து வருடாந்தம் 35 ஆயிரத்துக்கும், 40 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட உம்ரா பயணிகள் சவூதிக்கு யாத்திரை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

-Vidivelli

1 comment:

  1. THEY ALREADY DID IN INDIA, THE COMMISSION WILL BE SHARE BY KSA AMBASSADOR & SL MUSLIM REGIONAL MINISTER.

    ReplyDelete

Powered by Blogger.