Header Ads



பதவி மோகத்தில் மைத்திரி, மஹிந்தவுடன் கூட்டணி அமைக்க முயற்சி

பதவி மீதான மோகத்தில் மைத்திரி மஹிந்தவுடன் கூட்டணி அமைக் முயற்சி செய்கின்றார். யாரோ ஒருவருக்கு பிரதமர் பதவியினை வழங்கியேனும் தன்னுடைய ஜனாதிபதி பதவியினைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து மாற்று அரசாங்கமொன்றை அமைக்க முயற்சிக்கின்றார். அந்த முயற்சிக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டார். 

மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. 

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து மாற்று அரசாங்கமொன்றினை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. 

எதிர்காலத்தில் இவ்விரு தரப்பினரும் இணைந்து கூட்டரசாங்கமொன்றினை அமைப்பார்களாயின் அதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்குமா என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments

Powered by Blogger.