Header Ads



ஞானசாரரை சிறையில் சந்தித்த மேர்வின், பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்படுவேன் என அறிவிப்பு

எதிர்காலத்தில் பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார்.

சிறைவைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை இன்று -01- சிறைச்சாலை தலைமையகத்தில் வைத்து சந்தித்தபோதே மேவின் சில்வா இதனைக்குறிப்பிட்டார்.

இதனையடுத்து சிறைச்சாலை தலைமையகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மேவின் சில்வா, சிறைவைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆபத்து நேருமானால் அதற்கு ஜனாதிபதியும் பிரதமருமே பொறுப்பேற்கவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பௌத்த தர்மத்தை பாதுகாப்பதற்காக தாம் எதிர்காலத்தில் பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் மேவின் சில்வா தெரிவித்தார்.

1 comment:

  1. என்ன மந்திரம் ஓதினாலும் உங்க அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் வீட்டில போய் படுங்க

    ReplyDelete

Powered by Blogger.