Header Ads



இது மிகப்பெரும் அநியாயம்...!


-ராமசாமி சிவராஜா-

உரிய ஆவணங்கள் இல்லாமல் ( சாரதி லைசென்ஸ் உட்பட ) சென்று கொண்டிருந்த மணல் லொறி ஒன்றை தடுத்து நிறுத்தி சாரதியை கைது செய்தார் இந்த உத்தியோகத்தர்.

“எப்படி எனக்கு வெளியில் வருவது தெரியும்” என்று இவருடன் வாக்குவாதப்பட்டாராம் அரசியல் பின்புலம் கொண்ட அந்த சாரதி.

எப்படியோ,பின்னர் மேலதிகாரிகள் அந்த லொறியை சாரதியுடன் விடுவித்தனர்.

இதன் பின்னர் , நேற்று துப்பாக்கியுடன் மத்துகம , தெபுவன சந்திக்கு வந்து நியாயம் கேட்ட இவர் பின்னர் கைது செய்யப்பட்டார்...இப்போது அவருக்கு மனநோய் என்று பட்டம் வேறு...

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே நீதி வழங்க முடியாத பொலிஸ் , சாதாரண மக்களை எப்படி கையாளும் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் தொக்கி நிற்கின்றது...

2 comments:

  1. இலஞ்சம் வாங்கி உண்பவர்களுக்கு இந்த புத்திதான் வேலை செய்யும்

    ReplyDelete
  2. கட்டுரை எழுதும்போது விளக்கமா எழுதனும்..
    //துப்பாக்கியுடன் வந்தவர்// பொலிஸா, அல்லது குற்றவாளியா...

    ReplyDelete

Powered by Blogger.