Header Ads



மஹிந்த மீண்டும், ஆட்சி பீடம் ஏறமாட்டார் - ஹிருனிகா

குற்றவாளிகளையும் மோசடியாளர்களையும் தன்வசம் வைத்துக் கொண்டு முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும்    ஆட்சி பீடம் ஏறும் முயற்சிகளை  மேற்கொள்வது  சாத்தியமற்ற விடயம்  என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் குற்றவாளிகளை தன்வசம் வைத்துக் கொண்டதன்  காரணமாகவே  பாரிய விளைவுகளை சந்தித்தார். 

தற்போதும் அதன் தொடர்ச்சியே இடம் பெறுகின்றது.தேசிய அரசாங்கத்தை பயனற்றது என்று தூற்றும் எவ்வித  தகுதிகளும்  எதிர் தரப்பினருக்கு கிடையாது  எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.