Header Ads



ஊமையாக நடித்தவருக்கு, நாய் கொடுத்த அதிர்ச்சி - ஊரிலிருந்தே துரத்தியடிப்பு

கண்டியில் ஊமை போன்று நடித்து பிச்சை எடுத்த நபரை நாய் ஒன்று காட்டி கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த பகுதிக்கு சென்ற நபர், தான் ஒரு ஊமை என்றும், தன்னால் வாய் பேச முடியாதெனவும் நடித்துள்ளார். அவர் மீது பரிதாபப்பட்ட பலர் பணம் வழங்கியுள்ளனர்.

இதேபோன்று சில வீடுகளுக்கும் சென்றவர் சைகை மொழியில் தான் ஒரு ஊமை என கூறி ஏமாற்றியுள்ளார்.

பலர் பாவம் பார்த்து உணவு, பணம் மற்றும் பொருட்களை வழங்கியுள்ளனர். இதன் பின்னர் தினமும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

அதற்கமைய கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இவ்வாறு நடிப்பதற்காக குறித்த நபர் சென்றிருந்த போது அவரை நாய் ஒன்று தூரத்த ஆரம்பித்துள்ளது.

இதனால் அச்சமடைந்த நபர் அம்மா என்னை காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டவாறு மரத்தின் மீது ஏறியுள்ளார். எனினும் இறுதி வரை நாய் அவரை விடுவதாக இல்லை. அவர் கட்டியிருந்த சாரத்தை தூக்கி நாயின் மீது அவர் போட்ட போதிலும் நாய் ஒரு அடியேனும் நகரவில்லை.

எனினும் அவர் ஊமை இல்லை என அந்தப் பகுதி மக்களுக்கு தெரியவந்ததும், அங்கிருந்து அவர் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.