Header Ads



அரசாங்கம் கதை கூற ஆரம்பித்துள்ளது

கூட்டு எதிரணியின் மக்கள் சக்திக்காக கொழும்பில் ஒன்று திரண்ட பாரிய மக்கள் கூட்டம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் இப்போது ஒவ்வொரு கதையைக் கூற ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணிக்கு ஆதரவான மக்கள் குழு, நாம் எதிர்பார்த்தது போலவே கொழும்புக்கு வந்தனர். இந்தளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்க வில்லை. நாம் நினைத்தது போலவே மக்கள் கூட்டத்தைக் கொண்டு வந்து அரசாங்கத்திடம் காட்டினோம்.

தற்பொழுது அரசாங்கம் இந்த மக்கள் வெள்ளம் குறித்து ஒவ்வொரு கதையைக் கூறி வருகின்றது. உண்மை என்னவென்பதை நாட்டு மக்கள் விளக்கத்து எடுத்து விட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

1 comment:

  1. இந்த படத்தைப் பார்க்கும்போது இவர் நிரந்தரமாக இருக்க வேண்டிய வாழ்விடம் எங்கே என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வாயைத்திறந்தால் பொய்யும் புரட்டும் பொதுமக்களுக்கோ குறிப்பாக நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பவர்களுக்கோ அறவே கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.