Header Ads



"இலங்கை ரூபாவின் வீழ்ச்சிக்கு, காரணம் இதுதான்"

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணம் தற்போதைய அரசாங்கத்தின் முறையான முகாமைத்துவம் இன்மையே என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

வரலாற்றில் ஒருபோதும் இதுபோன்ற நிலை எற்பட்டதில்லை என்று அவர் கூறியுள்ளார். 

2007ம் ஆண்டு முழு ஆசிய வலயத்திலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போதிலும் இலங்கையின் பொருளாதார நிலையை சீராக பேணியதாக அவர் கூறியுள்ளார். 

உடனடியாக அரசு தலையிட்டு சரியான முறையில் முகாமை செய்தமையாலேயே அவ்வாறு பேண முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.