Header Ads



நாடுகளை கடன்சுமைக்குள் தள்ளும், சீனாவின் சூழ்ச்சிக்கு இலங்கையே சிறந்த உதாரணம்

மூன்றாம் உலக நாடுகளுக்கு கடன் பெற்றுக்கொடுத்து அந்த நாடுகளை கடன்சுமைக்குள் தள்ளும் சீனாவின் சூழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என அமெரிக்க செனட் சபை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டேவிட் பர்டியூ, பெட்ரிக் லேபி உள்ளிட்ட 14 செனட்சபை பிரிதிநிதிகள், அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கையளித்த மனுவொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிகள் அமெரிக்க திரைசேரி செயலாளருக்கும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவினால் வழங்கப்படுகின்ற இத்தகைய கடன்களுக்கு பாகிஸ்தான் பழியாகும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாக இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தரைவழியான பயணத்தின் முக்கியஸ்தளமாக பாகிஸ்தானை மையப்படுத்தியுள்ள சீனா, பாகிஸ்தானில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான், சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன் ரூபாய்கள் கடனாக கோரியுள்ளமையானது, சீனாவின் கடன் சூழ்ச்சியின் ஒரு அங்கமாகும் என செனட் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு, கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை பெற்றுக்கொண்ட 1.5 பில்லியன் ரூபாய் கடன் கோரிக்கையை செனட் சபையினர் எடுத்துக்காட்டியுள்ளனர்.

தற்போது பாகிஸ்தானின் கவுதார் நகரில் சீனா, பாரிய அபிவிருத்தி முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், இந்த முதலீடானது அரேபிய நாடுகளுக்கு நுழையும் முகப்பாக பயன்படுத்தும் நோக்கை உடையது என்றும், இலங்கையிலும் அத்தகைய முதலீடுகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. ஈமான் (நம்பிக்கை) கொண்டோரே!

    ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;

    எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும்.

    இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்;

    மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது;  இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்;

    தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;

    ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்;

    (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;

    அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது;

    தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்;

    இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;

    எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை;

    ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது;

    நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;

    ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.

    (அல்குர்ஆன் : 2:282)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.