Header Ads



பிரதமருக்கு இருக்கவேண்டிய தகுதி, ரணிலிடம் இல்லை - மகிந்த

பிரதமருக்கு இருக்கவேண்டிய தகுதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பின் ஊடாக இந்த வியடம் வெளிப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அப்படியாயின், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்த தகுதி இல்லை என்பதே ஜனாதிபதியின் கூற்றில் வெளிப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மக்கள் பலம் ஆர்ப்பாட்டத்தின் போது வழங்கப்பட்ட பால் பக்கட்டுகளில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.