Header Ads



இன்று கொழும்பில் மகிந்த அணியின், திட்டம் இதுவா..? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

கொழும்புக்கு வருகைதரும் கூட்டு எதிர்க்கட்சியினரிடமிருந்து விசேட நீதிமன்றங்கள், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பவற்றைப் பாதுகாக்க இன்று (05) விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

விசேட வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணப்படும் இடங்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பேரணியாகச் செல்வதற்கும், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கும் தடை இல்லை என அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.