Header Ads



முல்லைத்தீவு கடலுக்குவந்த, வெள்ளைப் புள்ளி சுறா - காப்பாற்றி கடலில்விட்ட கடற்படை (படங்கள்)


முல்லைத்தீவு அலம்பில் கடற்கரையில் கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளி சுறா மீனை காப்பற்றிய கடற்படையினர், அதனை மீண்டும் கடலில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மீன்பிடி ஆய்வாளர் அலுவலகத்தின் ஆய்வாளர் மொஹான் குமார, அலம்பில் கடற்படை அதிகாரிகளுக்கு கரையொதுங்கிய சுறா மீன் குறித்து அறிவித்துள்ளார்.

இதனையடுத்து கடற்படையினர் கடும் சிரமப்பட்டு, சுறா மீனை மீட்டு, 3 கடல் மைல் தொலைவிற்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.

சுறா குடும்பத்தை சேர்ந்த மிகப் பெரிய உயிரினமான வெள்ளை புள்ளி சுறா மீன் சுமார் 900 கிலோ கிராம் எடை கொண்டதாகவும் 9 மீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும்.

இந்த வகை சுறா மீன்கள் 70 முதல் 100 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியவை. மேலும் இந்த மீன் இனம் உலகில் அருகி வரும் மீன் இனம் என அறிவிக்கப்பட்டுள்ளளதுடன்.

இலங்கையில் இந்த மீனை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.முல்லைத்தீவு அலம்பில் கடற்கரையில் ஒதுங்கிய மிகப் பெரிய உயிரினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.