Header Ads



களுத்துறையிலிருந்து, கொழும்பு வந்த ரயிலுக்கு இப்படியும் நடந்தது


களுத்துறையிலிருந்து கொழும்பு - கோட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ரயிலொன்றின் இரு ரயில் பெட்டிகள், தனியாக விலகிச்சென்ற சம்பவமொன்று, ​இன்று (14) இடம்பெற்றுள்ளது.

மொரட்டுவ ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியிலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால், குறித்த வழித்தட ரயில் சேவையில், சற்று தாமதம் ஏற்பட்டது.

பின்னர், ரயில் சேவையாளர்களால், குறித்த ரயில் பெட்டிகள் இரண்டும், ரயிலுடன் இணைக்கப்பட்டதை அடுத்து, குறித்த ரயிலின் பயணம் தொடங்கியதாக, ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.