Header Ads



அழுக்கான ஆடைகளை மக்கள்முன், கழுவ வேண்டாம் - இலங்கை கிரிக்கெட் சபைமீது மஹேல ஆவேசம்

இலங்கை கிரிக்கெட் சபையின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அழுக்கான ஆடைகளை பொதுமக்கள் முன் கழுவ வேண்டாம் என அவர் சூடான முறையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் இணையத்தளத்தில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ள மஹேல உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் தீர்மானங்கள் எல்லா நேரங்களிலும் சரியாக அமைவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிகச் சரியானது என்பதை யோசிப்பதே சரியானது எனவும் உணர்ச்சிவசப்படாமல் தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும் எனவும் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.