Header Ads



உலகில் முதல் முறையாக அப்பிள், அறிமுகப்படுத்தியுள்ள புதுவிடயங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஐபோன் Xs மற்றும் ஐபோன் Xs மேக்ஸ் என அழைக்கப்படும் புதிய மாடல்கள் முந்தைய ஐபோன் X மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் Xs மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.

ஐபோன் Xs மேக்ஸ் மாடலில் இதுவரை வெளியானதில் பெரிய டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய ஐபோன்களில் அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். கிட் மூலம் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகையில் முதல் கேம் விரைவில் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க ஐபோன் XS மாடலில் 12 எம்பி டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்கும் பல்வேறு அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை ஆப்பிள் ஏ12 பயோனிக் சிப்செட் உதவியுடன் சிறப்பாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகிய செல்ஃபிக்களை எடுக்க முன்பக்கம் 7 எம்பி ட்ரூ டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

ஐபோன்களுக்கே உரிய கேமரா அம்சத்தை, அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் புதிய பொக்கே அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. புகைப்படம் மட்டுமின்றி வீடியோக்களை படமாக்கும் போதும் முன்பை விட அதிக அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

ஐபோன் XS மாடலின் பேட்டரி முந்தைய மாடலை விட அதிக பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய ஐபோனில் முதல் முறையாக டி.எஸ்.டி.எஸ். (டூயல் சிம், டூயல் ஸ்டான்ட்-பை) எனும் தொழில்நுட்பம் மூலம் டூயல் சிம் வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் புதிய ஐபோன் Xs சீரிஸ் மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.