Header Ads



திருமண கோரிக்கைகளினால், திணறும் அலரி மாளிகை

சமகாலத்தில் இலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படும் விடயமாக பிரதமர் மாளிகை மாறியுள்ளது.

நேற்று முன்தினம் அலரி மாளி்கையில் நடைபெற்ற திருமணம் வைபவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரட்னவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமண நிகழ்வு அலரி மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாளி்கையில் திருமணம் வைபவம் ஒன்று நடைபெற்றது.

இதன் காரணமாக நாட்டிலுள்ள பலரும் அலரி மாளிகையில் திருமண நிகழ்வினை நடத்த ஆர்வம் கொண்டுள்ளனர்.

நாளாந்தம் பெருமளவானோர் மண்டபம் தொடர்பில் தொலைபேசியில் தகவல் பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் திருமணத்திற்காக மாளிகையில் மண்டபம் கோரியமை தொடர்பான காணொளி ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

நாட்டின் பிரதமரின் உத்தியோகபூர்வ மாளிகையில், அரசியல் செயற்பாட்டுக்கு அப்பால் திருமண வைபவம் நடத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை பிரதமரின் மாளிகையில் எந்தவொரு திருமண நிகழ்வும் நடைபெறவில்லை என பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது.

அலரி மாளிகையில் பொது நிகழ்வுகளுக்கு என நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்திலேயே நேற்று முன்தினம் திருமண நிகழ்வு நடைபெற்றதாக அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.