Header Ads



சமாதான நீதிவான், 10 வயது சிறுமிக்கு செய்த கொடூரம்

10 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சமாதான நீதவானும், அவருடைய நண்பனும் அக்மீமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சமாதான நீதவான் குறித்த சிறுமியை தன்னுடைய முச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்போது துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், சமாதான நீதவான் குறித்த சிறுமியை தனது நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர்கள் இருவரும் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுபற்றி யாரிடமாவது கூறினால் தாயைக் கொல்லுவதாக குறித்த சிறுமியை அவர்கள் மிரட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை குறித்த நபர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற வேளை, அயலவர் ஒருவர் சிறுமியின் தாயிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் தாய் இதுபற்றி வினவியபோது, சிறுமி எல்லா விவரங்களையும் தாயிடம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.