Header Ads



மக்களுக்காக ஆடையை கலைய தயார் - ரோஹித Mp

பாராளுமன்ற உறுப்பினர் என்ற ஆடை மக்களால் அணிவிக்கப்பட்ட ஆடை எனவும் அதனை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கலைக்க தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தன தெரிவித்துள்ளார். 

 கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2015 ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்திய மக்களின் எதிர்ப்பார்ப்பு இப்போது சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் முன்னர் எமது நாட்டில் ஏற்றுமதி செய்யப்படுபவை தேயிலை, தேங்காய் மற்றும் இறப்பர் போன்றவை எனவும் ஆனால் தற்போது துறைமுகம், விமான நிலையம் என்பன ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.