Header Ads



இன்பராசாவுக்கு எதிராக, கிண்ணியா பொலீஸில் முறைப்பாடு


புனர் வாழ்வளிக்கப் பட்ட முன்னாள்  விடுதலைப் புலி உறுப்பனர் இன்பராசா என்பவரால் நடாத்தப் பட்ட ஊடக சந்திப்பொன்றில் காத்தான்குடி, மூதூர், கிண்ணியா ஆகிய பிரதேசங்களில் வாழும்  முஸ்லீம்களிடம் விடுதலைப் புலிகளின் 5000 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனால் இந் நாட்டு சிங்கள, தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறிய சம்பவம் ஒரு சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தலங்களில் உலா வந்ததை நாம் அறிவோம்.

உண்மைக்குப் புறம்பான இவ்விடயம் குறிப்பிட்ட பிரதேச மக்களை மாத்திரம் அன்றி இந் நாட்டு முஸ்லீம்கள் அனைவரின் உள்ளங்களை மிகவும் புன்படுத்தியுள்ளதோடு இம்முஸ்லீம்களுக் கெதிராக ஏதும் திட்டமிட்ட சதி ஒன்று அரங்கேற்றப் படலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 எனவே இவ்வாறான சதிகாரர்களுக் கெதிராக எமது அரசும் பொலீஸாரும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு இன்று கிண்ணியா பொலீஸ் நிலையத்தில் ACMC கட்சியின்  கிண்ணியா நகரசபை உறுப்பினர் மஹ்தியினால்   அது குறித்த முறைப்பாடு இன்று (2018.08.30) செய்யப்பட்டது.


1 comment:

  1. எல்லா ஊர்களிலும் இந்த முறைப்பாடு செய்யப்படவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.