Header Ads



ஞானசாரரை மீண்டும், வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமாம்...!

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி மீண்டும் அவர் சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையை அடுத்து, உடல்நிலை குறித்த ஆய்வுக்காக அவர் மீண்டும் அங்கு அழைத்துச் செல்லப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த தினம் அவருக்கு 6 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை அறிவிக்கப்படும் போது, சிறுநீரக தொகுதி கோளாறு காரணமாக அவர் சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.