Header Ads



தந்தையின் சடலத்தின் முன்பாக, ஆசிர்வாதம் பெற்று பரீட்சைக்கு தோற்றிய மாணவி


காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு முன்பாக விழுந்து ஆசிர்வாதம் பெற்று மாணவி ஒருவர் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் இன்று தோற்றிய சம்பவம் அம்பாறை- குமண பிர​தேசத்தில்  இடம்பெற்றுள்ளது.

தனது தாயிடம் ஆசிர்வாதம் பெற்ற இந்த மாணவி, தந்தையின் பூதவுடல் வைத்திருந்த சவப்பெட்டியின் முன்பாக விழுந்து வணங்கிய பரீட்சைக்குத் தயாராகியுள்ளார்.

குறித்த மாணவி கல்வி கற்கும் பாடசாலை அதிபர் மாணவியின் வீட்டுக்கு வந்து மாணவியை ஆறுதல்படுத்தி மஹானாபுர பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்காக தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம்  37 வயதான குறித்த மாணவியின் தந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.