Header Ads



"ரணிலின் மடியில் அமர்ந்துகொண்டு, போட்டியிட்டால் ஆதரவளிக்க போவதில்லை"

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியுமாக இருந்தால் எந்த விவாதங்களும் இன்றி ஆதரவளிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -16- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், ஆதரவளிப்பீர்களா என ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பியுள்ளார். அந்த கேள்விக்கு டிலான் பெரேரா பதிலளிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆசியுடன் போட்டியிட்டால் தாம் ஆதரவளிப்பதாகவும், அதனை விடுத்து ரணில் விக்ரமசிங்கவின் மடியில் அமர்ந்து கொண்டு போட்டியிட்டால் ஆதரவளிக்க போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.