Header Ads



முஸ்லிம்களிடம் ஆயுதங்களா..? முக்கிய தலைவர்களிடம் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள கோரிக்கை

விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இந்த விடயம் தொடர்பில் முறையான  தீவிர விசாரணையொன்று மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். 

இதேவேளை, இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் செயற்படுவதாகவும் இதனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று வியாழக்கிழமை அனுப்பி வைத்த விசேட கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- 

‘புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி 2018.08.18ஆம் திகதி கொழும்பில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் இன்பராசா கந்தசாமி முன்வைத்த கருத்துக்கள் எவ்வித ஆதாரமும் அற்ற, பாராதூரமான போலிக் குற்றச்சாட்டாகும்.  

விடுதலைப் புலிகளிடம் இருந்த 5ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்களை நானும் அமைச்சர் ரிஷாட்; பதியூதீனும் பெற்று அதனை கிழக்கு மாகாணத்திலுள்ள மூதூர், கிண்ணியா, காத்தான்குடி உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள இளைஞர்களுக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார். 

இந்த குற்றச்சாட்டை நான்  முற்றாக நிராகரிப்பதோடு, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தமை தொடர்பில் தீர விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன், அவ்வாறு ஆயுதங்கள் இருக்குமாயின் அது எங்குள்ளது? விற்பனை செய்யப்பட்டுள்ளதாயின் அது யாருக்கு? எப்போது? எவ்வாறு? விற்பனை செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களை வெளிப்படுத்த வேண்டும்.  

இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்கள் எனது கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், எனது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. 

இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் செயற்படலாம். நாட்டின் அமைதியை சீர்குழைத்து சாதாரண மக்களை குழப்பி நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழலை ஏற்படுத்துவதே குறித்த சக்திகளின் எதிர்பார்ப்பும் - முயற்சியுமாகும். 

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி முன்வைத்த போலிக் குற்றச்சாட்டினை  பெரிதுபடுத்தும் வகையில் தேசிய சுதந்திர முன்னணி, ராவன்னா பலய, தேசிய ஒறுங்கமைப்பு ஒன்றியம் மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புக்களும் - கட்சிகளும் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்களினாலும் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. 

எனவே, இது சம்பந்தமாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக முறையான தீவிர விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். அத்துடன், இவ்வாறு போலிக் குற்றச்சாட்டு முன்வைத்த தரப்பை தீர விசாரிப்பதோடு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இவ்வாறான பிரச்சாரங்களை செய்வதற்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் ? என்பது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்வது அத்தியவசியமாகும். இது தொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைக்கு எனது பூரண ஒத்துழைப்பினை வழங்குவேன் - என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. “தனது கௌரவம்-நற்பேயர் க்கு பாதிப்பாம்” - இது சுப்பர் காமேடி
    இல்லாத ஒன்றிற்கு எப்படி பாதிப்பு வரும்?

    ReplyDelete
  2. பிச்சைக்காரன் தன் புண்ணை வைத்து பிச்சையெடுப்பதை போல் தமிழனை விற்று பிழைப்பு நடாத்தும் பிச்சைக்கார தமிழ் அரசியல்வாதிகளை விட தன்னுடைய மக்களுக்காக பல சேவைகளை செய்யும் ஹிஸ்புல்லாவுக்கு அதிகமாகவே நட்பெயர் உண்டு

    ReplyDelete
  3. @Info x, தமிழ் அரசியல்வதாதிகள் பற்றிய உல்கள் கருத்தை ஓரளவு உண்மை தான். இவர்கள் இந்த strategy யை மாற்ற முயல வேண்டும், ஆனால் நேர்மையான பாதையில்.

    ஆனால், அதற்காக, உங்கட தலைவர்கள் ஊழல்-கள்ளவேலைகள் செய்து, அதில் 10-20% மக்களுக்கு கொடுப்பதை ஏற்றுகொள்ள முடியாது. இந்த லட்சனத்திலே புதுசா இந்த பிஸ்சஸ் வேற போல. Info x மாதிரி வாக்காளர்கள் இருக்கும் வரை இந்த அரசியல்வாதிகள் காட்டில் எப்பவும் மழை தான்.

    “வடகிழக்கு இணைந்தால் ரத்த ஆறு ஓடும்” என பாராளுமன்றதில் சொன்னதின் பின்னணி இப்போது தான் புரிகின்றது.

    -

    ReplyDelete
  4. இந்த அறிக்கைக்கு ஏன் இவ்வளவு தாமதம் அமைச்சரே.

    ReplyDelete

Powered by Blogger.