Header Ads



காஸா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதலில், டுபாய் விமானி பங்கேற்பு

மூன்று வாரங்களுக்கு முன்பாக காஸா மீது இஸ்ரேல் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் ஐக்கிய அறபு அமீரகத்தின் விமானி ஒருவரும் பங்குகொண்டிருந்தார் என இஸ்ரேலியப் பத்திரிகையாளர் எடிகொஹென் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலை நடத்திய ஊ-35 போர் விமானத்தில் அமீரக விமானி ஒருவர் பயணித்துள்ளார்.

இஸ்ரேலின் குறிப்பிட்ட பத்திரிகையாளர் இது தொடர்பில் டுபாயின் பொதுப் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் துறை பிரதித் தலைவர் ஜெனரல் தகீ ஹல்பானுக்கு விடுத்துள்ள அறைகூவலில், முடியுமென்றால் தனது இக்கருத்தை மறுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய விமானப் படையில் அமீரக விமானிகளும் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர். அறபு நாடுகளை அழிப்பதே இஸ்ரேலின் நோக்கம் என்பதைத் தெரிந்து கொண்டே அமீரகம் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாகவும் 2010 இல் டுபாயில் இடம்பெற்ற ஹமாஸ் தலைவர் மஹ்மூத் மப்ஹூஹை படுகொலை செய்தவரும் டுபாய் பாதுகாப்புத் தலைவர் கல்பானே என்றும் இஸ்ரேலிய பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. May Allah protect all of us from MUNAFIKS..

    ReplyDelete
  2. டுபாய் ஒரு முஸ்லிம் நாடா?

    ReplyDelete
  3. Good, டுபாய் பயங்கரவாதிகளை ஆதரிப்பதில்லை போலும்

    ReplyDelete
  4. Yes and you also will not be welcomed in Dubai..

    ReplyDelete
  5. Ajan antonyrajஎன்பவன் ஒரு மனநோயாளி போல் பதிவுகளை இடுகிறான்.இவன் என்ன முன்னால் புலியோ?

    ReplyDelete
  6. The UAE did not also support the tiger terrorism that had been rooted in our motherland.. not only the UAE, many other countries had not been in support of the terrorism abolished from Sri Lanka.. unfortunately this has been forgotten...

    ReplyDelete
  7. Yes.. he seems to be one of the terrorists who then made his escape..

    ReplyDelete

Powered by Blogger.