Header Ads



ஐ.தே.க. மீது முஸ்­லிம்கள், மிகவும் நம்­பிக்கை வைத்­துள்­ளார்கள் - வஜிர

நாட்டில் எதிர்­கா­லத்தில் இன­ வன்­மு­றை­க­ளுக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்கப் பட­மாட்­டது. இதில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­யாக இருக்­கிறார். அண்மைக் காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகக் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றைகள் தொடர்பில் அர­சாங்கம் ஆழ்ந்த கவ­லையைத் தெரி­வித்துக் கொள்­கி­றது என உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன தெரி­வித்தார்.

கிந்­தோட்டை ஸாஹிரா கல்­லூரி மண்­ட­பத்தில் நடை­பெற்ற, கிந்­தோட்­டையில் கடந்த வருடம் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

நிகழ்வில் அமைச்சர் வஜிர அபே­வர்­தன தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தா­வது, 

எமது நாட்டில் முஸ்லிம் மற்றும் சிங்­கள சமூ­கங்கள் பல நூற்­றாண்டு கால­மாக மிகவும் ஒற்­று­மை­யுடன், நல்­லு­ற­வுடன் வாழ்ந்து வந்­தி­ருக்­கின்­றன. இதற்கு வர­லாறு சான்று பகர்­கின்­றது. ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக அண்­மைக்­கா­லங்­களில் முஸ்லிம் – சிங்­கள உறவு பாதிப்­புக்­குள்­ளாகும் வகையில் சில வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­று­விட்­டன.

முஸ்­லிம்கள் ஐக்­கிய தேசிய கட்சி மீது மிகவும் நம்­பிக்கை வைத்­துள்­ளார்கள். ஐக்­கிய தேசிய கட்­சியே முஸ்­லிம்­களைப் பாது­காக்கும் கட்­சி­யாக அவர்கள் கரு­து­கி­றார்கள். மக்­களின் இந்த நம்­பிக்­கையை ஐக்­கிய தேசிய கட்சி ஒரு­போதும் பாதிப்­ப­டையச் செய்­ய­மாட்­டாது.

வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்ட மக்கள் அனை­வ­ருக்கும் உரிய நஷ்ட ஈடு­களை வழங்க வேண்டும் என்­பதில் பிர­தமர் ரணில்­ விக்­கி­ர­ம­சிங்க மிகவும் உறு­தி­யாக இருக்­கிறார். அத்­தோடு நஷ்­ட­ஈ­டுகள் துரி­த­மாக வழங்­கப்­பட வேண்டும் என்று புனர்­வாழ்வு அதி­கார சபை­யைப் பணித்­தி­ருக்­கிறார்.

எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான வன்­செ­யல்கள் இடம்­பெ­றக்­கூ­டாது எனவும் அதற்­கான திட்­டங்­களை வகுத்துச் செயற்­படும் படியும் பிர­தமர் பாது­காப்பு தரப்­பி­ன­ரையும், சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளையும் கோரி­யுள்ளார் என்றார்.

நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி கிந்­தோட்­டையில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட வீடுகள், வர்த்­தக நிலை­யங்­க­ளுக்குச் சொந்­த­மான 123 குடும்­பங்­க­ளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா­வுக்­குட்­பட்ட நஷ்ட ஈடுகள் வழங்­கப்­பட்­டன. அதற்­கான காசோ­லை­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரி­ய­வர்­க­ளுக்குக் கைய­ளித்தார்.

கிந்­தோட்டை வன்செயல்களினால் 133 சொத்துகள் பாதிக்கப்பட்டன இவற்றில் 10 சொத்துகள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நஷ்டஈடுகளுக்கு உரியவையாகும். அந்த 10 சொத்துகளுக்குமான  நஷ்டஈடுகள் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்பு வழங்கப்படவுள்ளன.
-Vidivelli

2 comments:

  1. தமிழ் அடிப்படைவாதத்தை வளர்த்துவிட்ட ஐ தே காவை கிழக்கு முஸ்லிம்கள் புறக்கணிப்பர்

    ReplyDelete
  2. This guy says. We will hit you and give you compensation". Therefore, all Muslims will vote for UNP. Good Logic......

    ReplyDelete

Powered by Blogger.