Header Ads



பாராளுமன்றத்தில் சஜித் - விமல் கடும் வாக்குவாதம், சண்டைபோட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள் என சபாநாயகர் அறிவுரை

முன்னாள் வீடமைப்புத்துறை விமல் வீரவன்சவுக்கும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துதறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் இன்றைய தினம் -09- இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விமல் வீரவன்ச நிர்மாணித்த வீடுகளில் பல அவரது உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியதையடுத்து விமல் வீரவன்ச எம்.பி.க்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் பாராளுமன்ற மந்திரி பதவியில் இருந்து நீங்குவேன் என விமல் வீரவன்ச எம்.பி. தெரிவிக்கையில், எனது குற்றச்சாட்டு பொய் என்றால் அமைச்சுப் பதவியை துறப்பேன் என சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய, நிகழ்கால அமைச்சரும் முன்னாள் அமைச்சரும் சிறு பிள்ளைகள் போன்று சண்டை போட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களின் தனிப்பட்ட காரணிகளை கூறும் இடம் இதுவல்ல. இன்றைய தினம் மிகவும் முக்கியமான சட்டமூலங்கள் விவாதத்திற்கு எடுக்கவேண்டியுள்ளது. ஆகவே காலத்தை வீணடிக்க வேண்டாம் என கூறினார். 

எனினும் இதன் பின்னரும் விமல் வீரவன்சவும் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.