Header Ads



இலங்கையில் சிங்களவர்களுக்கே, வாழ முடியாது போயுள்ளது

பண்டைய கால மன்னர்கள் செய்தது போல், சிங்களவர்களின் அபிமானத்தை தக்க வைத்துக் கொண்டு, சகல இனங்களும், மதங்களும் ஒன்றோடு ஒன்றாக கைகோர்த்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அவரது வீட்டில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறினார்.

புத்த பகவானின் போதனைகளின்படி நாம் எந்த மதத்திற்கும், இனத்திற்கும் எதிராக செயற்பட முடியாது.

எனினும் புலம்பெயர் தமிழர்களுக்கும், பிரபாகரனுக்கு தேவையானதை செய்ய முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக வாழும் மக்கள்.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் மக்கள். ஆனால், நாட்டின் உரிமை சிங்களவர்களுக்கே இருக்கின்றது. அதனை எவராலும் இல்லாமல் செய்ய முடியாது.

சந்திரிக்கா அம்மையாரின் நல்லிணக்கம் என்பது என்ன, அவர்கள் வெளிநாடுகளில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களிடம் பணத்தை பெறுகின்றனர். அந்த பணம் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்படுகிறது.

அதில் வாழ்கின்றனர். அப்படியான நல்லிணக்கம் எமக்கு எதற்கு. நல்லிணக்கத்தை கோர வேண்டியது அவர்களே. நாங்கள் அல்ல.

நல்லிணக்கத்தை கோரி அவர்களிடம் சென்று ஏன் மண்டியிட வேண்டும். இலங்கையில் எவரும் எங்கும் வாழ முடியும். சிங்களவர்களுக்கே வாழ முடியாது போயுள்ளது எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அமாவாசை நெருங்குது இந்த அரை பைத்தியத்தை பத்திரமா கொண்டு போய் சேருங்க. காணாத இடத்திலே கடிச்சு வச்ச்சிற போகுது சனியன்.

    ReplyDelete

Powered by Blogger.