Header Ads



நாட்டில் சட்டம், ஒழுங்கு தற்போது சரியான முறையில் செயற்படுவதில்லை

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு தற்போது சரியான முறையில் செயற்படுவதில்லை என்று பிரதேச அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். 

இன்று காலை களனி பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். 

அதேவேளை பொன்சேகாவுடன் அரசியல் செய்வது டை, கோர்ட் காரர்கள் அல்ல என்றும் அவருடன் செல்வோர் மீது சேறு சேறு பூசப்படுவதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எதிராக செயற்பட்ட போதிலும் இதுபோன்றவை இடம்பெறவில்லை என்றும் வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

1 comment:

  1. பதவிக்கும் அதிகாரத்துக்கும் கிடைக்கும் அத்தனை வசதிகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்தின் ஓர் அம்சமாக இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதைப்பார்ககும் போது அவர் யார் என்பதை அவருக்குத் தெரியாமல் தடுமாறுகின்றார் என்பது தான் தௌிவாகின்றது. இத்தகைக தடுமாற்றங்கள் ஆட்சிக்கு எப்போதும் பாதகமாக அமைவார்கள் என்பது தான் அரசியல் அனுபவம் கூறிகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.